மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர்கல்வி புத்தகங்கள் திங்கள் முதல் வினியோகம்
21:35 Edit This 0 Comments »மதுரை : மெட்ரிக் பள்ளிகளுக்கு 1 மற்றும் 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் திங்கள் முதல் வினியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6ம் வகுப்பு தொடர்ந்து நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு அப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சர்ச்சைக்குரிய செம்மொழி மாநாடு முத்திரை உட்பட சில பகுதிகளை கிழித்தோ, ஸ்டிக்கரால் மறைத்தோ மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதேசமயம் ஆங்கில வழி கல்வி நடக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புத்தகம் வினியோகிக்க தடை செய்யப்பட்டது. அரசின் வாய்மொழி உத்தரவால் புத்தகம் வினியோகிக்கவில்லை. இந்நிலையில் அப்பள்ளிகளுக்கும் புத்தகம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மெட்ரிக் பள்ளிகள் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு தேவையான புத்தக எண்ணிக்கையை தங்களுக்கு அருகில் உள்ள "நோடல் பாயின்ட்'டாக செயல்படும் மையங்களில் தெரிவித்து, மொத்த தொகையையும் டி.டி.,யாக வழங்க வேண்டும். 1ம் வகுப்புக்கு ரூ. 200, ஆறாம் வகுப்புக்கு ரூ. 250க்கு டி.டி., பெற்று வழங்கினால், வரும் திங்கள் முதல் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகார பள்ளிகள் கணக்கெடுப்பு: இதற்கிடையே தனியார் பள்ளிகளில் பல அங்கீகாரம் இன்றி செயல்படுவதால் ஆண்டுதோறும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடுகிறது. பல பள்ளிகளில் மாணவர்கள் கடைசி நேரத்தில் தேர்வு எழுதச் செல்லும்போது பிரச்னை உருவாகிறது. இதனால் தேவையற்ற மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க இப்போதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக உளவுப் பிரிவு போலீசார் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்து விபரம் சேகரித்து வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் ஆய்வாளர்கள், மாவட்ட துவக்கக் கல்வி அலுலகங்களுக்குச் சென்று பல்வேறு வகையான பள்ளிகள் குறித்து விபர சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment