ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம்.
11:51 Edit This 0 Comments »டெல்லி: பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்தான் ராம்லீலா மைதானம். ராம்லீலா நிகழச்சியும் இந்த மைதானத்தில்தான் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இங்குதான் தற்போது ராம்தேவி்ன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. பந்தல் அலங்காரம் கண்களைப் பறிப்பதாக உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக பந்தலுக்கு உள்ளே கிட்டத்தட்ட5000 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேடையில் ஏர்கூலர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் குடிநீருக்கு மக்கள் திண்டாடி விடக் கூடாது என்பதற்காக போர்வெல் போட்டு 650 குழாய்களையும் நிர்மானித்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருவோரின் வசதிக்காக குளியல் அறைகள், கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருமளவிலானோர் பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நேற்றே ராம்லீலா மைதானத்தில் வந்து குவிந்து விட்டனர்.
உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக டாக்டர்கள் குழுவையும் ஏற்பாடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 60 டாக்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
போராட்டத்தில் குழுப்பம் வந்து விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களையும் உண்ணாவிரதப் பந்தல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.
போராட்டத்தில் சமூ்க விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவித்து விடாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பாபாவின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்தான் ராம்லீலா மைதானம். ராம்லீலா நிகழச்சியும் இந்த மைதானத்தில்தான் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இங்குதான் தற்போது ராம்தேவி்ன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. பந்தல் அலங்காரம் கண்களைப் பறிப்பதாக உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக பந்தலுக்கு உள்ளே கிட்டத்தட்ட5000 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேடையில் ஏர்கூலர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் குடிநீருக்கு மக்கள் திண்டாடி விடக் கூடாது என்பதற்காக போர்வெல் போட்டு 650 குழாய்களையும் நிர்மானித்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருவோரின் வசதிக்காக குளியல் அறைகள், கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருமளவிலானோர் பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நேற்றே ராம்லீலா மைதானத்தில் வந்து குவிந்து விட்டனர்.
உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக டாக்டர்கள் குழுவையும் ஏற்பாடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 60 டாக்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
போராட்டத்தில் குழுப்பம் வந்து விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களையும் உண்ணாவிரதப் பந்தல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.
போராட்டத்தில் சமூ்க விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவித்து விடாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பாபாவின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


0 comments:
Post a Comment