தோடு அணிவதற்கு காரணம்

11:19 Edit This 0 Comments »


சென்னை: நீண்ட காலத்திற்குப் பின்னர் தான் காதில் சிறிய தோடு அணிவதற்கு காரணம் என்ன என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்கினார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டி அளிக்கும்போது அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.கடந்த காலங்களில் ஒரு ஆபணரமும் அணியாமல் இருந்தீர்கள்.இப்போது காதில் மட்டும் சிறிய தோடு அணிந்துள்ளீர்களே என்ன காரணம்?எனக் கேட்டனர்.

இதற்கு ஜெயலலிதா அளித்த பதில் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் எந்தவிதமான நகையையும் ஆபரணங்களையும் அணியவில்லை.இந்த முடிவு எனது கட்சியினருக்குப் பிடிக்கவில்லை.கடந்த பல ஆண்டு காலமாக எனது கட்சியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் உங்களை இப்படிப் பார்ப்பதற்கு (நகைகள் அணியாமல்) எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.எனவே உங்களது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும்.ஏதாவது நகை அணியவேண்டும்.யாரோ உங்களைப் பற்றி ஏதோ சொன்னார் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்?உங்களை பழித்துப்பேசிய தி.மு.க.வினர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.எனவே அவர்கள் ஏதோ சொன்னார்கள் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டுமென்று அவ்வப்போது என்னை வற்புறுத்தி வந்தார்கள். ஆனாலும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற அறிவிப்பு வந்ததும் அ.தி.மு.க.பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது என்ற செய்தி வந்ததும் பலர் அன்று வீட்டில் கூடிவிட்டார்கள் அப்போது கட்சியினர் என்னைப் பார்த்து நீங்கள் இப்போதாவது எங்களுக்காக உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டுமென்றும் இப்போதாவது நீங்கள் ஆபரணம் அணியவில்லையென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி இங்கேயே தீக்குளிப்போம் என்றும் தெரிவித்தனர்.
எங்களுடைய கட்சியினர் சொன்னால் செய்து விடுவார்கள்.பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சியினர் பலர் தீக்குளித்து மாண்டு போயிருக்கிறார்கள்.அவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை.எனவே இது என்னை திகைப்படையச் செய்தது.மகிழ்ச்சிகரமான நேரத்தில் சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் இப்படியொரு காரணத்துக்காக ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக எனது முடிவை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக நான் காதில் தோடு அணிய ஆரம்பித்தேன்.
தினமணி

0 comments:

MGR

MGR songs...