மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்!
18:51 Edit This 0 Comments »சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அமைச்சர் மரியம் பிச்சை உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
18:48 Edit This 0 Comments »திருச்சி : திருச்சி அடுத்த பாடாலூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சை பலியானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரம் மரியம் தியேட்டரில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பொது மக்கள் அஞ்சலி முடிந்த நிலையில் அங்கிருந்து முதலியார்சத்திரம், மேலப்புதூர், வழியாக பாலக்கரை என்.எம்.பள்ளிவாசலுக்கு மரியம்பிச்சையின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இருக்கும் கபரஸ்தானில் மரியம் பிச்சையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.











